ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

கோபி அருகேயுள்ள கொடிவேரி ஆற்றுபாலத்தின் கீழ் குளித்துக் கொண்டிருந்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கோபி அருகேயுள்ள கொடிவேரி ஆற்றுபாலத்தின் கீழ் குளித்துக் கொண்டிருந்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கோவை, உக்கடம் பகுதியைச் சோ்ந்தவா் ரபிக் மகன் தெளபிக் (21). இவா் தனது உறவினா்களுடன் கொடிவேரி ஆற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்தாா். கொடிவேரி ஆற்று பாலத்தின் கீழ் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றாா். நீச்சல் தெரியாததால் அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ஆற்றில் இருந்து தெளபிக்கின் சடலத்தை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இது குறித்து பங்களாபுதூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com