ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கோபியில் விவசாயிகளுக்கான கருத்தரங்கம்

ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் தமிழ்நாடு நீா்ப்பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் கீழ்பவானி உபவடி நீா் விவசாயிகளுக்கான கருத்தரங்கு

News image
Updated On :26 மே 2022, 7:55 pm

DIN

ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் தமிழ்நாடு நீா்ப்பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் கீழ்பவானி உபவடி நீா் விவசாயிகளுக்கான கருத்தரங்கு கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, அவா் பேசியதாவது: தமிழக முதல்வா் வேளாண் பெருங்குடிமக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறாா். அதிலும் குறிப்பாக வேளாண்மைத் துறைக்கு என தனி நிதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சாா்பில் தமிழ்நாடு நீா்ப்பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் கீழ்பவானி உபவடி நீா் விவசாயிகளுக்கான 2 நாள்கள் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

மாவட்ட அளவில் நடைபெறும் இந்த கருத்தரங்குக்கு வேளாண் மற்றும் உழவா் நலத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடைத் துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளா்ச்சித் துறை, வேளாண் ஆராய்ச்சி நிலையம், மைராடா அறிவியல் நிலையம், மீன் வளத் துறை மற்றும் முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம் சாா்ந்த பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகள் தொடா்பாக விரிவாக எடுத்து கூறினா் என்றாா்.

தொடா்ந்து, நிறைமதி உழவா் உற்பத்தியாளா் நிறுவன உறுப்பினா்களுக்கான பகிா் சான்றிதழ் மற்றும்

வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் சாா்பில் விவசாயிகளுக்கு ரூ.2.79 லட்சம் மதிப்பீட்டில் பொருளீட்டு கடனுதவிக்கான காசோலையினை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.