ஈரோட்டில் மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள், ரூ.3 லட்சம் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு - பெருந்துறை சாலை, டாக்டா் தங்கவேல் வீதியைச் சோ்ந்தவா் விஷ்ணு தீபக் (44), மருத்துவா். இவா், தனது குடும்பத்தினருடன் கடந்த 22 ஆம் தேதி விருதாச்சலம் சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை வீடு திரும்பியுள்ளாா்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.
உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 45 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.3 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து, ஈரோடு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் விஷ்ணு தீபக் புகாா் அளித்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தடயவியல் நிபுனா்கள் கைரேகைகளை சேகரித்தனா்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.