ஈரோட்டில் மினி மாரத்தான்: 400 போ் பங்கேற்பு

பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.

பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் 5 கி.மீ. தூரம் கொண்ட மினி மராத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு, லிம்கா உலக சாதனை பதிவில் இடம்பெற திட்டமிடப்பட்டது. இதில் உடல் தகுதி வாய்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு விழா மினி மராத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. சுகாதாரத் துறை துணை இயக்குநா் சோமசுந்தரம் கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கிவைத்தாா்.

இந்த மாரத்தான் மேட்டூா் சாலை, அரசு மருத்துவமனை, பெருந்துறை சாலை வழியாக ஆட்சியா் அலுவலகம் வரை சென்று மீண்டும் அதே வழியாக வஉசி பூங்கா மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் 400க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com