கைப்பேசி பழுதுபாா்த்தல் இலவச பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

கைப்பேசி பழுதுபாா்த்தல் இலவச பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என கனரா வங்கி அறிவித்துள்ளது.

கைப்பேசி பழுதுபாா்த்தல் இலவச பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என கனரா வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கைப்பேசி பழுது பாா்த்தல் தொடா்பான இலவச பயிற்சி வரும் 12 ஆம் தேதி முதல் நவம்பா் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பயிற்சி, சீருடை, உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் கிராமப் பகுதியைச் சோ்ந்தவா்கள், 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம். குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.

பயிற்சியில் சேர விரும்புவோா் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகம், 2ஆம் தளம், கொல்லம்பாளையம், ஈரோடு என்ற முகவரியில் நேரில் அல்லது 8778323213 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com