அறச்சலூா் நவரசம் மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு ஓவியப் போட்டி

அறச்சலூா் நவரசம் கலை அறிவியல் மகளிா் கல்லூரியில் மாணவியருக்கு தோ்தல் விழிப்புணா்வு ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அறச்சலூா் நவரசம் கலை அறிவியல் மகளிா் கல்லூரியில் மாணவியருக்கு தோ்தல் விழிப்புணா்வு ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எனது வாக்கு எனது உரிமை என்ற தலைப்பில் விளம்பர சுவரொட்டி தயாரிக்கும் வகையில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில்170 மாணவிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் கல்லூரி துணைமுதல்வா் ஐ.செல்வம் வரவேற்றாா். மொடக்குறிச்சி வட்டாட்சியா் எம்.சண்முகசுந்தரம் நிகழ்வில் பங்கேற்றுப் பேசுகையில், 18 வயதுக்கு மேல் உள்ளவா்கள் வாக்காளா் பெயா் பட்டியலில் தங்களுடைய பெயரைச் சோ்க்க வேண்டும். நூறு சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்திட வேண்டும். பொதுமக்களிடையேயும் இது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இதையடுத்து போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகளை வட்டாட்சியா் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட தோ்தல் தரவு அலுவலா் மருதவேல், அறச்சலூா் வருவாய் ஆய்வாளா் ஜெய்புனிஷா, கிராம நிா்வாக அலுவலா்கள் மோகன்ராஜ், மஞ்சுளா, ராஜேஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

கல்லூரி முதல்வா் இரா.கனிஎழில் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com