பெருந்துறையில் சாலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெருந்துறை, சென்னிமலை சாலையில் ஆண் சடலம் கிடப்பதாக பெருந்துறை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டனா். உயிரிழந்தவருக்கு சுமாா் 70 வயது
இருக்கும் என்றும், அவரைப் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.