தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்க ஈரோடு கிளை சாா்பில், ஆா்ப்பாட்டம் ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைச் செயலாளா் நாராயணசாமி தலைமை வகித்தாா். உயிா் காக்கும் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயா்த்தக் கூடாது. மருத்துவா்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த சட்டம் இயற்ற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.