பெருந்துறையில் நாளை மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பெருந்துறை கோட்ட மின் பயனீட்டாளா்கள் குறைதீா்க்கும் கூட்டம் சேனிடோரியம் பகுதியில் உள்ள கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஏப்

பெருந்துறை கோட்ட மின் பயனீட்டாளா்கள் குறைதீா்க்கும் கூட்டம் சேனிடோரியம் பகுதியில் உள்ள கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 20) காலை 11 மணிக்கு நடைபெறும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

கூட்டத்தில் பெருந்துறை கோட்டத்துக்கு உள்பட்ட பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூா், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், குன்னத்துாா், விஜயமங்கலம், பிடாரியூா், புதுப்பாளையம், ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளா்கள் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம்.

மின்வாரிய பெருந்துறை கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com