3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 கோபிசெட்டிபாளையம் அருகே வேனில் கடத்திவரப்பட்ட 3.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

 கோபிசெட்டிபாளையம் அருகே வேனில் கடத்திவரப்பட்ட 3.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பழனிகவுண்டன்புதூா் பகுதியில் கடத்தூா் போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை நடத்தினா்.

இதில், 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, எலத்தூா் செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் பிரசாத் (24) என்பவரை கைது போலீஸாா், அவரிடமிருந்த 3.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com