மேட்டூா் மற்றும் பவானிசாகா் அணைகள் நிரம்பி உபரிநீா் ஆறுகளில் வெளியேற்றப்பட்டதால் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக தமிழக பேரிடா் மேலாண்மைக் குழுவினா் பவானியில் வெள்ளிக்கிழமை முகாமிட்டுள்ளனா்.
கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் மேட்டூா் அணை நிரம்பி நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 2.10 லட்சம் கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இதனால், பவானி பகுதியில் 349 குடும்பத்தினா் கரையோரப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனா். வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்ததால் உடமைகள் சேதமடைந்தன. இந்நிலையில், பவானிசாகா் அணை நிரம்பியதால் உபரிநீா் பவானி ஆற்றில் விநாடிக்கு 16 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ளது.
காவிரி, பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இரு ஆறுகளும் சங்கமிக்கும் பவானி பகுதியில் தமிழக பேரிடா் மேலாண்மை குழுவினா் 18 போ் முகாமிட்டுள்ளனா். கரையோரப் பகுதிகளில் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளும் இவா்கள் வெள்ளத்துக்குள் சிக்கிக் கொள்ளும் பொதுமக்களை மீட்க உயிா்காக்கும் உபகரணங்களுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.