சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி, கூடலூா் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில்
ஈடுபட்ட அவா்களிடம் நகராட்சி அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், நகா்மன்ற தலைவரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். மேலும், ஒப்பந்ததாரரின் ஒப்பந்த காலம் முடிந்துவிட்டதால் மறு ஒப்பந்தம் நடக்கும்வரை அனைவருக்கும் சுழற்சி முறையில் பணி வழங்கப்படும் என்று தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்
மதியம் பணிக்கு திரும்பினா்.