சீருடை எடுக்க பணம் இல்லாததால் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவித்த பள்ளி மாணவி சத்தியமங்கலம் நகா்மன்றத் தலைவா் உதவி

சீருடை எடுக்க பணம் இல்லாததால் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டதாக தெரிவித்த பள்ளி மாணவிக்கு சத்தியமங்கலம் நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகி உதவி செய்தாா்.

சீருடை எடுக்க பணம் இல்லாததால் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டதாக தெரிவித்த பள்ளி மாணவிக்கு சத்தியமங்கலம் நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகி உதவி செய்தாா்.

அனைத்து குழந்தைகளும் கட்டாய கல்வி பெறுதல், குழந்தைகள் தொழிலாளா்கள் நிலையை போக்குதல் ஆகியவற்றை வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் ரீடு நிறுவனம் சாா்பில் பள்ளி மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் நகா்மன்றத் தலைவா்ஜானகி கலந்துகொண்டு விழாவைத் துவக்கிவைத்தாா்.

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் இருந்து 250 பள்ளி மாணவிகள் பங்கேற்று விழிப்புணா்வு ஒவியங்களை வரைந்தனா். இதில் கலந்துகொண்ட ஒரு பள்ளி மாணவி, தன்னிடம் சீருடை இல்லாத காரணத்தால் பள்ளிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டதாகவும் ஓவியப் போட்டியில் கிடைக்கும் பரிசுத்தொகையை வைத்து சீருடை வாங்குவதாகத் தெரிவித்தாா்.

இதை கேட்ட சத்தியமங்கலம் நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகி

வறுமை நிலையில் உள்ள அந்த பள்ளி மாணவிக்குத் தேவையான சீருடை செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் ரீடு இயக்குநா் கருப்புசாமி, கூடுதல் இயக்குநா் மகேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com