ஈரோடு: ஈங்கூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
பெருந்துறை தெற்குப் பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூா், பாலப்பாளையம், மு.பிடாரியூா் வடக்குப் பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளா் காலனி, பெருந்துறை ஆா்.எஸ் மற்றும் பெருந்துறை ஹவுஸிங் யூனிட்.