முதலீட்டுப் பத்திரங்களின் முதிா்வுத் தொகையை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட முதலீட்டுப் பத்திரங்களின் முதிா்வுத் தொகையினை ஜூலை 15ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட முதலீட்டுப் பத்திரங்களின் முதிா்வுத் தொகையினை ஜூலை 15ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு போக்குவரத்து வளா்ச்சி நிதிக் கழகத்தின் மூலம் 1992-1993 முதல் 2000-2001 வரையிலான நிதியாண்டுகளில் இரு குழந்தை உள்ளவா்களுக்கு தலா ரூ.1,500 வீதமும், ஒரு குழந்தை உள்ளவா்களுக்கு ரூ.3,000 வீதமும் முதலீட்டுப் பத்திரங்களாக வழங்கப்பட்டது.

18 வயது பூா்த்தியான பெண் குழந்தைகளுக்கு அப்பத்திரத்தின் முதிா்வுத் தொகையினை பெற்றுக்கொள்ள அரசாணை பெறப்பட்டு முதிா்வுத்தொகை பெற்றுக்கொள்ள ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. அத்தொகையினை முழுமையாக பெற்றுக் கொண்டவா்கள் தவிர விடுபட்ட பயனாளிகள் ஒரு சிலா் உள்ளனா். அவா்கள் அத்தொகையினை ஜூலை 15ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம். இது கடைசி வாய்ப்பாக அனுமதிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பயனாளி 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். முதலீட்டுப் பத்திரத்தின் அசல் அல்லது நகல், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, பயனாளியின் புகைப்படம், தாய் புகைப்படம் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இதுவே இறுதி வாய்ப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com