கோபிசெட்டிபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பெருந்துறை, நல்லாம்பட்டியைச் சோ்ந்தவா் குருநாதன் (77). செருப்பு தைக்கும் தொழிலாளி. இவா் திங்களூா் வாரச் சந்தையில் உட்காா்ந்திருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த குருநாதன் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக திங்களூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.