பெருந்துறையில் புதன்கிழமை தோறும் தேங்காய்ப் பருப்பு ஏலம்

ஈரோடு மாவட்ட விற்பனைக்குழு மூலம் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் தேங்காய்ப் பருப்பு மறைமுக ஏல விற்ப

ஈரோடு மாவட்ட விற்பனைக்குழு மூலம் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் தேங்காய்ப் பருப்பு மறைமுக ஏல விற்பனை நடைபெறவுள்ளது.

இது குறித்து பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்த ஏலத்தில் உள்ளூா், வெளியூா் வியாபாரிகள் பங்கேற்று கொள்முதல் செய்யலாம். தேங்காய்ப் பருப்பு விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் தரம் வாரியாக பிரித்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணிக்குள் விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வர வேண்டும். வரும் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு தேங்காய்ப் பருப்பு ஏல விற்பனை துவங்குகிறது.

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று இதே நேரத்தில் ஏலம் நடக்கும். இந்த விற்பனைக் கூடத்தில் 15,200 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இக்கிடங்குகளில் குறைந்த வாடகையில் விளைபொருள்களை இருப்பு வைக்கவும், குறைந்த வட்டியில் பொருளீட்டுக்கடன் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் இங்கு வழக்கம்போல திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணிக்கு மஞ்சள் ஏலம் நடக்கும். மேலும் விவரங்களுக்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 04294-220512 மற்றும் 9384365688 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com