அவல்பூந்துறையில் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமை ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி தொடங்கி வைத்தாா். மொடக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் இளங்கோ வரவேற்றாா்.
முகாமில் இருதய நோய்கள், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், குழந்தை நலம், எலும்பு மூட்டு சிகிச்சை, கண் மருத்துவம், தோல் நோய் உள்ளிட்ட
அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். மேலும் 17 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளா் சு.குணசேகரன், அவல்பூந்துறை பேரூராட்சித் தலைவா் ராதாமணி சுப்பிரமணி, துணைத் தலைவா் சோமசுந்தரம், லக்காபுரம் ஊராட்சி மன்ற தலைவா் சாலைமாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.