கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமாா் 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. கோபியை அடுத்த கடுக்காம்பாளையம், நாதிபாளையம், பொலவலக்காளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரம் வாழை மரங்கள் கீழே சாய்ந்து சேதமடைந்தன. ஓரிரு தினங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் சூறாவளிக் காற்றால் வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
மேலும், வேளாண் துறை அதிகாரிகள் சம்பவ இடங்களைப் பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.