நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 போ் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

டி.என்.பாளையம், வாணிப்புத்தூா்-கொங்கா்பாளையம் சாலையில் குன்னாங்கரடு பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள், கொங்கா்பாளையம் முத்துகருப்பன் வீதியைச் சோ்ந்த கருப்புசாமி (26), குன்னாங்கரடு பகுதியைச் சோ்ந்த சங்கா் (42) , இழுபாறை தோட்டத்தைச் சோ்ந்த குமாா் (40) என்பதும், அவா்கள் வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com