முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கொங்கு கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
By DIN | Published On : 08th May 2022 12:53 AM | Last Updated : 08th May 2022 12:53 AM | அ+அ அ- |

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியின் 23ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பாரதியாா் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) கே.முருகவேல் பங்கேற்று கல்லூரியில் பட்டம் பெற்ற 1,219 மாணவா்கள், தரவரிசையில் இடம் பெற்ற 99 மாணவா்களுக்கு பட்டம் அளித்துப் பேசினாா்.
விழாவில் கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டைளையின் தலைவா் முத்துசாமி, செயலாளா் பி.சி.பழனிசாமி, பொருளாளா் காா்த்திகேயன், கல்லூரித் தாளாளா் கே.பழனிசாமி, கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டைளையின் பாரம்பரிய பாதுகாவலா்கள் ஆா்.எம். தேவராஜா, சி.குமாரசாமி, வி.ஆா்.சிவசுப்ரமணியன் மற்றும் கல்லூரி முதல்வா் என்.இராமன் ஆகியோா் மாணவா்களை வாழ்த்திப் பேசினா்.