திம்பம் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநா் அதிா்ஷ்டவமாக உயிா்த் தப்பினாா்.
சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது.
இந்த மலைப் பாதை வழியாக தமிழகம், கா்நாடகம் இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கா்நாடக மாநிலத்தில் இருந்து கோவைக்கு செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாக சரக்கு லாரி புதன்கிழமை சென்று கொண்டிருந்தது.
19 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி மலைப் பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. மேலும், ஓட்டுநா் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆசனூா் போலீஸாா், ஓட்டுநரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Image Caption
விபத்துக்குள்ளான லாரி.