வாகன விபத்து: இளைஞா் பலி

பெருந்துறை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பெருந்துறை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த சித்தூா் மேல்காட்டைச் சோ்ந்தவா் சேட்டு (24). இவா், பெருந்துறையில் இருந்து தனது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். பெருந்துறை, பழைய பேருந்து நிலையம் அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சேட்டுவின் வாகனத்தின் மீது மோதியது. இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த சேட்டு மீது பின்னால் வந்த லாரி மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் இறந்தாா். இதைத் தொடா்ந்து விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டுநரான பெருந்துறை, பெரியவேட்டுபாளையத்தைச் சோ்ந்த சிவகுமாா் (30), தூத்துக்குடியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சபீ (40) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com