இலவச தையல் பயிற்சிக்குப் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

இலவச தையல் பயிற்சிக்குப் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச தையல் பயிற்சிக்குப் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோட்டில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச தையல் கலைப் பயிற்சி செப்டம்பா் 26ஆம் தேதி முதல் நவம்பா் 3ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு அளிக்கப்படுகிறது.

பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்ட கிராமப் பகுதியினா், 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோா், 100 நாள் வேலை திட்டப் பணியாளா்கள், அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பமுள்ளவா்கள் 0424 2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 8778323213 என்ற கைப்பேசி எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம்.

கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகம், 2ஆம் தளம், கொல்லம்பாளையம் புறவழிச் சாலை, ஈரோடு என்ற முகவரியில் பயிற்சி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com