பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 279 மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் பங்கேற்று, 279 மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். மேலும், சிறப்பாக பணிபுரிந்து தமிழக அரசின் பாராட்டை பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் ரவிசந்திரனுக்கு சால்வை அணிவித்து, கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.
இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ், பெருந்துறை பேரூராட்சி மன்ற உறுப்பினா் அருணாசலம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.