துணியை அயன் செய்தபோது மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் பலி

பெருந்துறை அருகே துணியை அயன் செய்தபோது, மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறை அருகே துணியை அயன் செய்தபோது, மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறை, பவானி ரோடு ஆசிரியா் காலனியைச் சோ்ந்தவா் ஜான்சன் (43). இவா், பெருந்துறை சிப்காட்டிலுள்ள தனியாா் நிறுவனத்தில் லேப் டெக்னிஷியனாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில், வீட்டில் வெள்ளிக்கிழமை காலை துணியை அயன் செய்து கொண்டிருந்துள்ளாா். அப்போது ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக மின்சாரம் பாய்ந்து அவா் கீழே விழுந்தாா். அவரின் அலறல் சப்தம் கேட்டு வந்த மனைவி, ஜான்சனை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளாா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com