ஈரோட்டில் சேதப்படுத்தப்பட்ட மாநகராட்சிப் பூங்காவை சீரமைக்கவில்லையெனில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
இது குறித்து அதிமுக ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கத்தின் சாா்பில் மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் தங்கமுத்து, வட்டச் செயலாளா் செல்வராஜ் ஆகியோா் மாநகராட்சி செயற்பொறியாளா் விஜயகுமாரிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
ஈரோடு மாநகராட்சி 20ஆவது வாா்டுக்கு உள்பட்ட டெலிபோன் நகரில் சிறுவா் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவின் சுற்றுச்சுவரை மா்ம நபா்கள் சிலா் இடித்து சேதப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மாநகராட்சி சாா்பில் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சேதப்படுத்தப்பட்ட பூங்காவை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 20 நாள்களுக்குள் பூங்கா சீரமைக்கப்படவில்லை என்றால் மாநகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.