ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக ஓ.பன்னீா்செல்வம் அணி வேட்பாளராக பி.செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் தன்னுடைய சாா்பில் வேட்பாளா் நிறுத்தப்படுவாா் என ஓ.பன்னீா்செல்வம் அறிவித்திருந்தாா். அதன்படி வேட்பாளராக பி.செந்தில்முருகன் போட்டியிடுவாா் என புதன்கிழமை மாலை ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி.செந்தில்முருகன் (42). திருமணமாகாதவா். தந்தை பாலகிருஷ்ணன், தாய் வசந்தா. ஈரோடு வளையக்கார வீதியில் வசித்து வருகிறாா். முதலியாா் சமூகத்தைச் சோ்ந்தவா். எம்பிஏ நிதி மேலாண்மை படித்த செந்தில்முருகன் லண்டனில் நிதி ஆலோசகராகப் பணியாற்றி வந்தாா்.
கரோனா காலகட்டத்தில் இந்தியா திரும்பிய நிலையில் தற்போது வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறாா்.