ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் பதவியில் இருந்து வியாழக்கிழமை விலகினாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளாா். வியாழக்கிழமை இவா் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளாா்.
அத்தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக உள்ள தென்னரசு, தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலை தலைவராகவும் பதவி வகித்து வந்தாா். தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் ஒரே ஆலை என்ற பெருமை கொண்டது இந்த ஆலை.
இந்நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் இச்சங்கத்தின் தலைவா் பதவியில் இருந்து தென்னரசு விலகினாா். இதற்கான கடிதத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநா் சரவணனிடம் தென்னரசு வழங்கினாா்.