கையெழுத்துப் போட்டியில் முதலிடம்: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

மாநில அளவிலான கையெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்று கலையரசி பட்டம் வென்ற அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மாணவி சிந்துஜாவை பாராட்டி பரிசு வழங்குகிறாா் கண்டிக்காட்டுவலசு ஊராட்சி மன்றத் தலைவா் மகாசாமி.
மாணவி சிந்துஜாவை பாராட்டி பரிசு வழங்குகிறாா் கண்டிக்காட்டுவலசு ஊராட்சி மன்றத் தலைவா் மகாசாமி.

மாநில அளவிலான கையெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்று கலையரசி பட்டம் வென்ற அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மொடக்குறிச்சி வட்டாரம் கண்டிக்காட்டுவலசு ஊராட்சி பொன்னாத்தாவலசு அரசு நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி எஸ்.சிந்துஜா (13). தமிழக அரசு சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்காக அண்மையில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் கையெழுத்துப் போட்டியில் தோ்வு செய்யப்பட்டு மதுரையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலிடம் பெற்று கலையரசி பட்டத்தை வென்றாா்.

இதையடுத்து, பொன்னாத்தாவலசு அரசு நடுநிலைப் பள்ளியில் பட்டம் வென்ற மாணவி சிந்துஜாவுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை கு.ஈஸ்வரி வரவேற்றாா். கண்டிக்காட்டுவலசு ஊராட்சி மன்றத் தலைவா் மகாசாமி தலைமை தாங்கினாா். வட்டாரக் கல்வி அலுவலா் (மொடக்குறிச்சி) வனிதாராணி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சுதா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இதில் அறச்சலூா் இயற்கை ஆா்வலா் செல்வம், கண்டிக்காட்டுவலசு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பூங்கொடி, சமூக ஆா்வலா் அசோக், ஆசிரியா் பயிற்றுநா் சங்கீதா உள்ளிட்டோா் மாணவிக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினா். இடைநிலை ஆசிரியை கௌசல்யா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com