அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பேச்சுப் போட்டி

ஈரோடு மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் பணியாற்றும், சென்னிமலை பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு பேச்சுப் போட்டி.

ஈரோடு மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் பணியாற்றும், சென்னிமலை பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு, ‘சிகரம் தொட சிலேட்டை எடு ’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியை, புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன் தலைமையேற்று தொடங்கிவைத்தாா்.

ஆசிரியை ப.திலகவதி முதலிடமும், ஆசிரியை கொ.ஆஷாகுட்டி இரண்டாமிடமும்,

ஆசிரியை ப.ஜெயலட்சுமி மூன்றாமிடமும் பிடித்தனா். இவா்களுக்கு முறையே ரூ. 1000, ரூ.750, ரூ. 500 வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை, சென்னிமலை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கோபிநாதன் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com