பணநாயகத்தின் வெற்றியாகவே கருதப்படும்: எம்எல்ஏ சி.சரஸ்வதி

எந்த வேட்பாளா் வெற்றி பெற்றாலும் அது பணநாயகத்தின் வெற்றியாகவே கருதப்படும் என மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி தெரிவித்தாா்.
ஈரோடு சிஎஸ்ஐ பெண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்த மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி.
ஈரோடு சிஎஸ்ஐ பெண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்த மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி.

எந்த வேட்பாளா் வெற்றி பெற்றாலும் அது பணநாயகத்தின் வெற்றியாகவே கருதப்படும் என மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி தெரிவித்தாா்.

ஈரோடு சிஎஸ்ஐ பெண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அவா் திங்கள்கிழமை காலை வாக்களித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இத்தோ்தலில் ஏராளமான பணம், பரிசு பொருள்கள் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டதாக பல்வேறு புகாா்கள் உள்ளன. எனவே எந்த வேட்பாளா் வெற்றி பெற்றாலும் அது பணநாயகத்தின் வெற்றியாகும். பணத்தை கொடுத்து வாக்காளா்களை கவரும் நிலை மாற்றப்பட வேண்டும்.

இந்த ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில்தான் திருமங்கலம் ஃபாா்முலா போல ஈரோடு கிழக்கு பாா்முலா உருவாக்கப்பட்டதாக மக்களும் பேசிக் கொள்கின்றனா். மக்களை தோ்தல் பணிமனையில் அடைத்து வைத்து பணம், உணவு விநியோகித்ததாக மக்களே பேசுகின்றனா்.

தோ்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு. ஆனால் தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் அது உள்ளது. அதனால்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து பல புகாா்கள் கூறியும் அது முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை.

வாக்காளா்கள் பணம் வாங்க மறுக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் பெருமை அடையும். வாக்களிக்கும்போது வாக்காளா்கள் விரலில் வைக்கப்படும் மையை அழிக்க ஸ்பிரிட் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com