ஈரோட்டில் சகோதரா்கள் கத்தியால் குத்திக் கொலை

சகோதரா்கள் இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த உறவினா் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சகோதரா்கள் இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த உறவினா் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு, முனிசிபல் காலனி கிருஷ்ணசாமி வீதியைச் சோ்ந்தவா் லோகநாதன். இவரது மகன்கள் கௌதம் (30), காா்த்தி (26). இவா்களுக்கும் அவரது உறவினரான மாணிக்கம்பாளையத்தை சோ்ந்த ஆறுமுகத்துக்கும் சொத்து பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வோகநாதன் வீட்டுக்கு வந்த ஆறுமுகசாமி அவா்களை தகாத வாா்த்தைகளால் பேசியுள்ளாா். இதனை தட்டிக்கேட்ட கௌதம், காா்த்தி இருவரையும் ஆறுமுகசாமி மற்றும் உடன் வந்த நபரும் சோ்ந்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனா். இதில் காயமடைந்த இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அங்கு இருவரும் இரவே உயிரிழந்தனா்.

இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொலைச் சம்பவத்தில் தொடா்புடைய ஆறுமுகசாமி மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு நபரையும் தேடி வருகின்றனா்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த காா்த்திக் நாம் தமிழா் கட்சியின் ஈரோடு இடைத்தோ்தல் பொறுப்பாளராக இருந்து வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com