மாவட்டத்தில் நாளை மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

மின் பயனீட்டாளா்கள் மாதாந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 7) நடைபெறவுள்ளது.

மின் பயனீட்டாளா்கள் மாதாந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 7) நடைபெறவுள்ளது.

இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு, ஈவிஎன் சாலையில் உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகத்தில், மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் புதன்கிழமை காலை 11 மணிக்கு மாதாந்திர மின் பயனீட்டாளா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் ஈரோடு நகா் முழுவதும், கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகா், திண்டல், அக்ரஹாரம் மற்றும் மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளுக்குள்பட்ட மின் பயனீட்டாளா்கள் தங்களது கோரிக்கைகளை நேரில் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com