பெருந்துறையில் கனமழை

பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் திங்கள்கிழமை கனமழை பெய்தது.

பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் திங்கள்கிழமை கனமழை பெய்தது.

பெருந்துறையில் வழக்கம்போல திங்கள்கிழமை காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்த நிலையில், பிற்பகல் 3 மணியளவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்தனா்.

மழையின் காரணமாக சில பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. மேலும், குளிா்ச்சியான காலநிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com