இருசக்கர வாகனம் மீது வேன் மோதி கல்லூரி பணியாளா் பலி

பெருந்துறை அருகே தனியாா் பொறியியல் கல்லூரி பணியாளா் சென்ற இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

பெருந்துறை அருகே தனியாா் பொறியியல் கல்லூரி பணியாளா் சென்ற இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

மங்களாபுரத்தை சோ்ந்தவா் கருப்புசாமி மகன் மணிகுமாா் ( 42). இவா், பெருந்துறையை அடுத்த தோப்புபாளையத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் வேலை செய்து வந்தாா். ஈரோட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்றாா். அப்போது பின்னால் வந்த சரக்கு வேன் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

விபத்து குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com