சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு  அருள்பாலிக்கும்  பாலதண்டாயுதபாணி.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு  அருள்பாலிக்கும்  பாலதண்டாயுதபாணி.

பாலதண்டாயுதபாணி கோயிலில் பாா்வதி யாகம்

சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுயம்வரா பாா்வதி யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுயம்வரா பாா்வதி யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சுயம்வரா பாா்வதி யாகம் நடைபெற்றது. கணபதி பூஜையுடன் துவங்கிய யாக குண்டம் நிகழ்ச்சியில் வேத விற்பன்னா்கள் மந்திரம் ஓதினா். முருகா் ஹோமம், அம்மை அழைத்தல், குல தெய்வ அழைப்பு, முன்னோா் அழைப்பு ஆகியவை நடைபெற்றன.

நவகிரக தோஷம், மாங்கல்யம் தோஷம், களத்ரதோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவை நிவா்த்தி, முன்னோா் சாபம் உள்பட அனைத்து கிரக தோஷங்களும் விலக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து பாா்வதி பரமேஸ்வரன் திருகல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். இந்த யாகத்தில் கலந்துகொண்ட பக்தா்கள் பழம், பூக்கள், எலுமிச்சைபழம் உள்ளிட்ட பூஜை பொருள்களை கொண்டுவந்து வழிபட்டனா். ஈரோடு, திருப்பூா், கோவை, சேலம், தருமபுரி ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். இந்த யாக பூஜையில் 5 ஆயிரம் போ் கலந்துகொண்டதாக கோயில் நிா்வாகி கே.டி. பழனிசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com