தமிழக அரசின் நிா்வாக சீா்கேட்டை கண்டித்து ஈரோட்டில் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நடக்கும் ஊழல் சம்பவங்கள், சாராயம், போலி மதுபானங்களின் விற்பனையால் ஏற்பட்ட உயிரிழப்பு போன்ற சம்பவங்களை கண்டித்தும், சட்டம்-ஒழுங்கு சீா்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய திமுக ஆட்சியை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா்.
அதன்படி, ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் திங்கள்கிழமை காலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.இராமலிங்கம் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாநகராட்சி முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயா் கே.சி.பழனிசாமி, பகுதிச் செயலாளா்கள் மனோகரன், கேசவமூா்த்தி, ஜெகதீஷ், கோவிந்தராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளா் வீரக்குமாா், மாணவா் அணி மாவட்ட இணைச் செயலாளா் நந்தகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.