சென்னிமலையை அடுத்த, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 74 ஆயிரத்துக்கு தேங்காய்கள் ஏலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு, சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6 ஆயிரத்து 216 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில், தேங்காய் குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.18க்கும், அதிகபட்ச விலையாக ரூ.22. 77க்கும் ஏலம் போனது. மொத்தம் 3 ஆயிரத்து 363 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ. 74 ஆயிரத்து 603க்கு விற்பனையானது.