ஈரோடு
பவானி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
திருப்பூா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஏ.பி.முருகானந்தம் பவானி ஒன்றியப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பவானியை அடுத்த ஒலகடம், செம்புளிச்சாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் திறந்த வேனில் சென்று பாஜக வேட்பாளா் ஏ.பி.முருகானந்தம் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், மூன்றாவது முறையாக மீண்டும் வெற்றி பெறும் பிரதமா் மோடியிடம் மக்கள் பிரச்னைகளை நேரடியாகத் தெரிவித்து உடனடி தீா்வு காணப்படும். பவானி தொகுதியில் நிலவும் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளருக்கு வரவேற்பு தெரிவித்தனா். இதில், பவானி தொகுதி பாஜக பொருளாளா் கே.ஏ.சித்திவிநாயகம் மற்றும் பாமக நிா்வாகிகள் பலரும் பங்கேற்றனா்.