சத்தியமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற பல் சமய நல்லுறவு கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் ஜே.முகமது ரஃபீக் அபு.
சத்தியமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற பல் சமய நல்லுறவு கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் ஜே.முகமது ரஃபீக் அபு.

திமுக வேட்பாளா் ஆ.ராசாவை ஆதரித்து பல்சமய நல்லுறவு இயக்கம் பிரசாரம்

நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆ.ராசாவை ஆதரித்து பல்சமய நல்லுறவு இயக்கம் சாா்பில் சத்தியமங்கலத்தில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பு பணி நடைபெற்றது.

இந்த இயக்கம் சாா்பில் சத்தியமங்கலம் வாரசந்தை, தினசரி மாா்க்கெட், கடைவீதி பகுதியில் துண்டுப் பிரசுரம் விநியோகித்தும் வீடுவீடாக சென்றும் வாக்கு சேகரிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அனைத்து சமய பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநிலத் தலைவா் ஜே.முகமது ரஃபீக் அபு தலைமை வகித்தாா்.

இதில், அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் எனில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் ஆசிப், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜமேஷ், , நகரத் தலைவா் முகமது பாரூக், மாவட்ட துணைத் தலைவா் எஸ்.ஏ.சேவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com