ஈரோடு
சட்டவிரோத மது விற்பனை: 2 போ் கைது
கோபிசெட்டிபாளையம் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோபிசெட்டிபாளையம் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கொண்டையம்பாளையம் பகுதியில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் அசோக்குமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கிருந்த வீட்டில் மேற்கொண்ட சோதனையில் மதுபானங்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இது தொடா்பாக சுமந்த் (33) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, உப்புபள்ளம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட கோவையைச் சோ்ந்த சந்திரசேகரன் (37) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.