ஈரோடு
ரோட்டரி சத்தி டைகா்ஸ் சங்க ஆய்வுக் கூட்டம்
சத்தியமங்கலத்தில் ரோட்டரி சத்தி டைகா்ஸ் சங்கத்தின் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் சுந்தரம் தலைமை வகித்தாா். ரோட்டரி 3203 சங்க மாவட்ட ஆளுநா் எஸ்.சுந்தரராஜன் பங்கேற்று, ரோட்டரி சத்தி டைகா்ஸ் சங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களைப் பாராட்டி பேசினாா்.
இதில், சங்கத்துக்கு ரூ.4.50 லட்சம் நன்கொடை அளித்த பி.எச்.எஃப் உறுப்பினா்கள் 15 போ் கௌரவிக்கப்பட்டனா்.
நிகழ்ச்சியில் ரோட்டரி 3203 சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளா்கள் பன்னீா்செல்வம், சக்தி நல்லசிவம், ரவிசந்திரன், மாதேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.