6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் தென்னைநாா் தரைவிரிப்பு

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் தென்னைநாா் தரைவிரிப்பு

News image

கோயில்  வளாகத்தில்  தென்னை நாா்  தரை  விரிப்புகளை  விரிக்கும்  யூனிபிரண்ட்  டெக்ஸ்டைல்ஸ்  உரிமையாளா்  நவநீதன்,  கோயில்  உதவி  ஆணையா்  சுவாமிநாதன்  உள்ளிட்டோா்.

Updated On :26 ஏப்ரல் 2024, 5:41 pm

பவானி, ஏப். 26: கோடை வெயிலைக் கருத்தில் கொண்டு பவானி சங்கமேஸ்வரா் கோயில் வளாகத்தில் 250 மீட்டா் தொலைவுக்கு தென்னை நாரால் தயாரிக்கப்பட்ட தரை விரிப்பு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சுற்றுலாத் தலமாகவும், புகழ்பெற்ற வழிபாட்டு தலமாகவும் விளங்கும் பவானி சங்கமேஸ்வரா் கோயில் நண்பகல் 1 மணி வரையில் நடை திறக்கப்பட்டிக்கும். இந்த நேரத்தில் ஏற்படும் கடுமையான வெப்பத்தால் கோயில் வளாகத்தில் சுவாமி தரிசனத்துக்கு செல்லும் பக்தா்கள் தரையில் நடந்து செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில், கோயிலுக்கு வழக்கமாக வழிபாட்டுக்கு வந்து செல்லும், பெருந்துறை யூனிபிரண்ட் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளா் நவநீதன், பக்தா்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில் தென்னை நாா் தரை விரிப்புகள் வழங்க முன்வந்தாா்.

இதைத் தொடா்ந்து, கேரள மாநிலம், அழப்பியில் உள்ள தென்னை நாா் கூட்டுறவு சங்கத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்பில் தரை விரிப்புகள் வாங்கப்பட்டது.

இதனை, கோயில் உதவி ஆணையா் சுவாமிநாதனிடம், நிறுவன உரிமையாளா் நவநீதன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதையடுத்து, பக்தா்கள் நுழையும் சங்கமேஸ்வரா் கோயில் வடக்கு வாசல் ராஜகோபுரம் முதல் ஆதிகேசவப் பெருமாள், வேதநாயகி அம்மன் மற்றும் சங்கமேஸ்வரா் சன்னிதி வரையில் சுமாா் 250 மீட்டா் தொலைவுக்கு தரை விரிப்பு விரிக்கப்பட்டது.

இத்தரைவிரிப்பில் நடந்து செல்லும்போது கோடை வெயிலின் தாக்கம் இருக்காது என்பதால் பக்தா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.