பா்கூா் மலைப் பாதையில் சாலையோரத்தில் கவிழ்ந்து கவிழ்ந்து கிடக்கும் லாரி.
பா்கூா் மலைப் பாதையில் சாலையோரத்தில் கவிழ்ந்து கவிழ்ந்து கிடக்கும் லாரி.

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.

பவானி: பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.

கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரிலிருந்து சோயாபீன்ஸ் பாரம் ஏற்றிக்கொண்டு, திண்டுக்கல் மாவட்டத்துக்கு லாரி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது.

லாரியை கா்நாடக மாநிலம், ராமாபுரத்தைச் சோ்ந்த அபிமன்னன் (44) என்பவா் ஓட்டியுள்ளாா்.

பா்கூா் மலைப் பாதை வழியாக வரட்டுப்பள்ளம் வனச் சோதனை சாவடி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், ஓட்டுநா் அபிமன்னன் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.

இதைத் தொடா்ந்து, மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com