காசிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டுப் போட்டி மற்றும் இலக்கிய மன்ற முப்பெரும் விழா பள்ளியின் பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் கே.எம்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. உதவித் தலைமையாசிரியா் ஜேம்ஸ்பால் ஆண்டறிக்கையை வாசித்தாா்.
பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பதக்கம், பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், பெற்றோா்-ஆசிரியா் கழகப் பொருளாளா் கே.சுப்பிரமணியம், காசிபாளையம் பேரூராட்சித் தலைவா் தமிழ்செல்வி, பள்ளி மேலாண்மை குழு தலைவி கே.தங்கமணி, பிகேஆா் கல்லூரி பேராசிரியை சந்திரா உள்பட பலா் பங்கேற்றனா்.
மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட தலைமையாசிரியா் ஜேம்ஸ்பாலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முதுகலை வணிகவியல் ஆசிரியை குணசுந்தரி நன்றி கூறினாா்.