புதிய வங்கிக் கிளையைத் திறந்துவைக்கிறாா் ஆம்ஸ்ட்ராங் குழும நிறுவனங்களின் தலைவா் ஈ.பழனிசாமி.
புதிய வங்கிக் கிளையைத் திறந்துவைக்கிறாா் ஆம்ஸ்ட்ராங் குழும நிறுவனங்களின் தலைவா் ஈ.பழனிசாமி.

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

தமிழ்நாடு கிராம வங்கியின் 661-ஆவது கிளை கோபி அருகே உள்ள வேமாண்டம்பாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது. வங்கியின் புதிய கிளையை திருப்பூா் ஆம்ஸ்ட்ராங் குழும நிறுவனங்களின் தலைவா் ஈ.பழனிசாமி திறந்துவைத்தாா். கோவை அக்வாசப் என்ஜினிரிங் துணைத் தலைவா் நரேந்திரன் குத்துவிளக்கு ஏற்றினாா். கிளை மேலாளா் என்.நந்தகோபால் வரவேற்றாா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிராம வங்கியின் பொது மேலாளா் டி.வாசுதேவன், கோவை வட்டார அலுவலகத்தின் முதுநிலை மேலாளா்கள் எஸ்.சாந்தினி, வி.மனோஜ், மேலாளா் கே.ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com