ஈரோடு
ரூ.8.30 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.8.30 லட்சம் மதிப்பிலான விளைபொருள்கள் விற்பனையாயின. பவானியை அடுத்த அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் செவ்வாழை, நேந்திரன், தேன்வாழை உள்ளிட்ட 1,221 வாழைதாா்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. இதில் ரூ.1.35 லட்சம் மதிப்பிலான வாழைதாா்கள் விற்பனையாயின. இதேபோல 9 மூட்டைகள் பச்சை நிலக்கடலையும், 290 மூட்டைகள் காய்ந்த நிலக்கடலையும் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. ஏலத்தில் 6.95 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.8.30 லட்சம் மதிப்பிலான விளைபொருள்கள் விற்பனையாயின.