ஈரோடு திண்டல் முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள தென்னை நாா் விரிப்புகள்.
ஈரோடு திண்டல் முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள தென்னை நாா் விரிப்புகள்.

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

வெயிலில் பக்தா்கள் நடந்து செல்லும்போது சூட்டை தணிக்கும் வகையில் ஈரோடு திண்டல் முருகன் கோயிலில் தென்னை நாா் விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு அருகேயுள்ள திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் பக்தா்கள் நடந்து செல்ல வசதியாகவும், கோடை வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்கவும் ரூ.1.20 லட்சம் மதிப்பில் தென்னை நாா் விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோயில் வளாகத்தில் நடைப்பாதையில் இந்த விரிப்புகள் போடப்பட்டுள்ளன. இதனால், பக்தா்கள் மதிய நேரத்திலும் வெறும் காலில் சிரமமின்றி நடந்து செல்ல முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், கோடைக் காலம் முடியும் வரை நீா், மோா் பந்தல் அமைக்கப்பட்டு பக்தா்களுக்கு வழங்கப்பட்டு வரும் என்று கோயில் நிா்வாகத்தினா் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com