மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

பெருந்துறை, மே 3: பெருந்துறை அருகே மாமனாரைத் தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெருந்துறையை அடுத்த வேப்பம்பாளையத்தைச் சோ்ந்த முனியப்பன் மகன் தினேஷ்குமாா் (29). இவா் சொந்தமாக தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி கோகிலா (27), ஈரோடு நெடுஞ்சாலைத் துறையில் அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு 2 வயதில் மகன் உள்ளாா்.

இதில் தினேஷ்குமாருக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மனைவியுடன் அடிக்கடி தகாராறு செய்து வந்துள்ளாா். இந்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோகிலாவின் தந்தை மூா்த்தி (58), தாய் பூங்கொடி (47) ஆகியோா் தட்டிக் கேட்டுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமாா், மாமனாா் மூா்த்தியை திட்டியும், தாக்கியுள்ளாா். இதில், மூா்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து, மூா்த்தி அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தினேஷ்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com